Tuesday, January 12, 2021

குலமுயர்த்தும் பொங்கல்


                                                  {வாழ்க வேளாண் பணி;

                                         வாழ்க குலமுயர்த்தும்  பொங்கல்} 

                                                   HAPPY PONGAL.


உலகின் உறைவிடம் உறங்கிடா நிலம்; 

நிலம்தனை உழுதிட,நிறைந்திடும் பலம்.  

பலமுறை தோற்றிடும் வேளாண் குலம்,  

பலியிட வருவராம் பாவிகள் வலம்.


விதைகள்  இன்றி  ஆகுமோ வேர்கள்? 

பாதைகள் இன்றி  பார்ப்பரோ  ஊர்கள்?

மாதிரி மரபுடன் மண்கலம் பொங்கிடின் 

தீதெலாம் அகன்று தினந்தினம் பொங்கலே!

 

பூத்ததும் காய்த்ததும் பூமியின் தாய்மையே! 

காய்த்ததை,காத்ததை,கள்வர்கள் கவர்ந்திட, 

வாய்த்ததை பொங்குவர்,வழியிலா வேளாண். 

மேய்த்ததை மென்னுவர்,மேற்குடி முதலைகள்!

 

போலியாய்ப்  பொங்குமோ,உழுதோர் உழைப்பு? 

கூலியை மதித்தலே,குலமுயர்த்தும்  பொங்கலாம்! 

ப.சந்திரசேகரன்.  


 

    

No comments:

Post a Comment