Monday, February 17, 2025

விமானக் கூண்டு

மகிழ்ச்சியில் சிறகடித்து

வானத்தில் பறப்பதற்கும்,

மாற்றான் மண்ணில்

இகழ்ச்சியுடன் விலங்கிட்டு

வானமே விரக்தியுற

விரட்டப் படுவதற்கும்,

இடைப்பட்ட காலமது ,

கண்ணில் நீர்த்திரையும்

கணக்கில் காரிருளும்

கலந்திட்டக் கதையாம்.!

எண்ணிலா கனவுகளில்

எல்லாம் அடகுவைத்து,

அன்னிய தேசத்தில்

ஆள்கடத்தல் செய்யப்பட்டு,

வாழ்க்கையைத் தொலைத்தல்

விதியெனும் நஞ்சோ,

விதிகளின் வஞ்சகமோ.?

கஞ்சிக்கு வழியின்றி

கால்நடைபோல் வாழ்வோர்கள்,

நெஞ்சு நிமிர்த்த

நெடுங்கடல் தாண்டுவராம்.!

அஞ்சியஞ்சி வாழ்தலும்

அலைக்கழிக்கப் படுதலும்,

அரசின் அலட்சியமோ

ஆசைகளின் லட்சியமோ? 

உயரப் பறந்தாலும்

ஊர்க்குருவி பருந்தாமோ

எனும் ஒற்றைக்கேள்வியுன்

பரிகாசப்பொருளோடு,

உயர்வுற நினைத்தோரை

துயருறச் சிறகொடித்து

தூக்கி எறிந்தனரே!

ஆணவ அன்னியரை

துணிந்துத் தூற்றவோ?

அன்றின் அறிவோடு,

வக்கற்று ஆளும்

தோள்தரா நம்மோரை,

வாள்கூர் வார்த்தைகளால்

வலியாறச் சாடுவதோ.?

எம்மக்கள் அவமானம்,

எமையாள்வோர் இயலாமை!.

ப.சந்திரசேகரன்







Thursday, February 13, 2025

Through the Valentine vision.

HAPPY VALENTINE'S DAY. 

{14th Feb,2025}

Love has many success stories.

Many of them succeeded by failures,

To find pages in history and literature.

For those who love every bit of their life,

Strength would beam high, to beat betrayal.

Filial love is the succulent fruit of conjugal glory.

Parent's love is a long sentence sans punctuation.

Friendship filters, the endearing essence of love.

Fraternal love is made up of friction and fusion.

Romance is a racy, ritzy and roller coaster ride.

God measures love through the Valentine glass

By screening the saints and sinners as a whole,

To display the inside out of the true gist of love,

That shuttles between the soil and the stars above.

P. Chandrasekaran.

Wednesday, January 22, 2025

சுயபுராணம்

 

பிறந்ததும்,வாழ்வேனோ

என்றிருந்த  ன்

உடல்நிலையின் உள்குத்து,

பெற்றோர்க்கு பெரும்சோகம். 

வீழ்வேன் என நினைத்தாயோ? 

என்பதுபோல் எழுந்தேன்,

புதுவலிமை பெற்று.

சப்பைக்கால் கொண்டு 

துப்பாக்கி தூக்கியவன் நான், 

மாணவர் NCC முகாமில்!. 

"பாசக்காரன் வன்

என்பது தந்தையின் சான்றிதழ். 

"கண்ணா" என்று 

அழைத்திடும் அம்மாவுக்கு, 

சந்தைக்குச் செல்கையில் 

சத்தமில்லா எடுபிடிநான். 


கல்லூரி படிக்கையிலே,

என்சுமையை தன்சுமையாய் 

சைக்கிளில் பலநாள் 

என்னைச் சுமந்தார், 

என் அண்ணன்! 

அவரின்றி.எனக்கில்லை

முதுகலை மேற்படிப்பு.


'சைக்கிள்' என்றதும் 

இளமைக் கால

இனிமைத் தோழன்

மனோகரமாய் மனமுவந்து

பலநாள் என்னை

முன்னும் பின்னும்

அமரச் செய்து

மூச்சு வாங்க

சைக்கள் மிதித்தது,

பசுமை நினைவாய்

பளிச்சிடும் நெஞ்சினில்!.


பணியில் சேர்ந்ததும், 

சைக்கிளில் சுமந்து 

திரைப்படம் காண 

திரட்டிச் சென்ற 

நறுமலர் நண்பர், 

நெஞ்சில் நிறைவார்! 

'சுகவாசிடா நீ' 

என்றுக் கூறி,

மனசாட்சி என்னை 

மனச்சுமை ஏற்றி,

ண்டியிடச் செய்யும். 


இளமைக் கால 

இளகிய மனசு, 

இறுகிப் போனது 

இருபதுக் கிடையில்!

இறுக்கம் தந்தவர் 

கிறித்துவ நண்பர். 

''சந்திரா !சந்திரா!, 

உந்தப் படுகிறாய் 

உணர்ச்சியில் நீ! 

பரந்த மனதில் 

கிரங்கிப் போகிறாய்!'' 

என்று சொல்லியே, 

பழுக்கக் காய்ச்சினார் 

பழக்கப் பாதையை!

(Yes!.''You are carried away

By extreme emotions

Or by generosity''.

This is what he said)


இளகிய மனது

இரங்கித் துடிக்கையில்,

இளைப் பாற்றினார்,

தலைக்கு மடிதந்த

இஸ்லாமிய நண்பர்.!

'அவன்தான் மனிதன்' 

படத்தைப் பார்த்த 

இன்னொரு நண்பர்.

" 'பழைய சந்திரனை' 

படத்தில் பார்த்தேன். 

புவனேஸ்வரி தியேட்டரில்" 

என்று எழுதினார், 

கடிதம் ஒன்றினை !

அமரரான அந்தநண்பர்

கணிதம் துறந்து,

வணிகம் விஞ்சினார்.


 "அதிஷ்டக் காரன்டா" 

என்றென்னை அழைத்தார்,

மூத்த நண்பர். 

இல்லற வாழ்க்கை 

இனிதே அமைய, 

எனக்கொரு வரமாய் 

அமைந்தவர் அவரே! 

மனசின் கனத்தினை

மூட்டைக் கட்டினார், 

மனைவியாய் வந்தவர். 

அவரின் வரவால்

விரக்தியின் இரங்கட்பா,

வீரியம் கண்டது, 

வாழ்நாள் முழுவதும்! 


மனை மாட்சியும் 

மக்கட்பேறும், 

மனிதனின் வாழ்வில் 

மாபெரும் வமே! 

வகுப்பறை வாசம்

ஆசிரியன் எனக்கு

எண்ணத்தால் சிறகடிக்கும் ,

வண்ணத்துப் பூச்சியாய்!.


பாரம் நிறைந்திட

ஈரம் குறைவதும்,

பாசம் பெருகிட 

மனம் கனிவதும்,

மாறிடும் உணர்வின் 

கூறாக் குறைகளே! 

மற்றவர்க்காக மனமிறங்கிட,

முற்றிய வினையும்

முடிவுரை கண்டது.

தனக்கென எதுவும்

கோராக் கூர்வாள்

பிறர்க்கென போர்ப்பல

குரல்வழிப் பாய்ந்தது.


நல்லதோர் நட்பும் 

நல்வழிப் பாதையும்,

நாற்திசைப் பயணமே! 

மல்லாந்து படுத்து 

மனதார உறங்குதல், 

கல்லான மனதும் 

கனிவுறும் காலமே!

பொல்லாத மனிதரும்

மல்லாந்து படுத்து 

மாதங்கள் க(கி)டப்பது

மரணத்துக்குக் காகவெனின்,

மெல்லிய மனதை

கொல்லாமல் கொல்லுமே,

நில்லாத வாழ்க்கை!

எல்லோரும் போல

இன்றுநான் நினைப்பது,

சொல்லாமல் ஒருநாள்

இல்லாமல் போவதே!

ப.சந்திரசேகரன்.

Monday, January 13, 2025

நல்லவை பொங்குவோம்



இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள். 

---------------------------------------------------------------------

பழையன எரித்தல்,அல்லவே போகி!

அழிப்பன அழித்தது,போகியென் றாகி,

வழித்தடம் வரையுமாம்,வலிகள் விலக்கி!

பொங்கலின் கோலம்,புத்தொளிப்  பூரணம் .

மஞ்சள்,கரும்பு,மாவிலைத் தோரணம், 

நெஞ்சின் நிறைவிற்கு,காட்டும் காரணம்.

பசுத்தோல் போர்த்திய புலிகள் இருக்க, 

பசப்புகள் இல்லா மாடுகள் எல்லாம், 

ருசிக்கும் பொங்கலில்,ரசனை யுறுமாம். 

வள்ளுவன் வழியில் வாழ்வோர் தமக்கு, 

உள்ளம் பொங்குதல்,உண்மைக் கூற்றே!

ஒருவரை ஒருவர்  ஊர்வழிக் காணுதல், 

மருவிடா அன்பின் மனம்நிறை ஊற்றே! 

நல்லவை பொங்குவோம்,நாட்பட எங்கும்.

சொல்லும் செயலும் சுகம்பல பொங்கிட, 

செல்லும் வழிதனில் சிகரம் கூட்டுவோம்.

ப.சந்திரசேகரன். 

 

Tuesday, December 31, 2024

மணம் வீசும் புத்தாண்டு

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

பந்தின் வீச்சில் பாய்ந்திடும் வேகம், 

உந்தும் விசையின்,உடல்பலக் கூற்றே! 

உலகம் விரிதல் உள்ளக் குதூகலம்; 

கலகம் அகன்றிட, காரியம் வெல்லும்.


ன்றும் மானுடம் ஒன்றெனும் உணர்வை, 

ஒன்றெனும் ஆளுமை ஓங்கித் தாக்குமாம்! 

புதுமைகள் புரிதல் பூசலின் விதையெனில்,

சதியின் வலையில் சிக்கிடும் புதுமைகள்!


நன்மைக் கரங்களின் நாடித் துடிப்பினை, 

வன்மை விலக்கி வாழ்வுறச் செய்வோம்! 

கண்ணிய விழிகளே கடவுளைக் காணும், 

புண்ணியம் கூடுல், புகலிடம் புகுத்தலே! 


இன்னலும் ஈட்டலும் எதிர்மறை ஆகுமோ, 

தன்னுடன் பிறரை சேர்த்துப் பகிர்ந்திடின்?.

மண்ணில் மதத்துன், மனிதம் மலர்ந்து, 

விண்ரை வீசட்டும், வாசம் புத்தாண்டில்!

ப.சந்திரசேகரன். 

 


A Grand New Dawn



                 HAPPY NEW YEAR 2025

Time's mirror truly reflects life, as it looks.

But life's mirage, feeds false waters to its brooks.

On time's linear track, life has its turnarounds.

But in Time's cyclic course, life's race rebounds.


As we tear daily sheets of the manmade calendar,

It unfolds both hope and despair to us, as a pair

If a fresh leaf fills the mind, with a feel-good factor,

We love turning a new page, in the life book's chapter.


Every new year is looked upon, as a grand new dawn,

Unmindful of the uncertain dusk that would fall upon.

With fairness in perception, forming the onward arch,

Faith without frailty, facilitates a fine forward march.


For some of us, each new year is as much as another year.

But for many others, it is much more than changing the gear.

If each one's daily agenda is well set with global concern, 

Life is a trained toll-free journey, with a lot to learn and earn.

P, Chandrasekaran. 




Friday, December 27, 2024

The magnificent Dr, Manmohan Singh

 


 Magnificent Dr. Manmohan Singh

 Meekly remained as integrity's wing.

 All Indians can proudly sing and salute

 Dr. Singh's straight, and sensible route.

 As the fresh minister of India's finance, 

 He drove the economic growth's stance.  

 Tracing the core global yardsticks at a glance, 

 He removed the lumps with a surgeon's lance.


 Steadily did he grow to ripe, responsible reigns,

 With political blood, least flowing in his veins.

 Loyalty was loftily bound to his self and soul,

 With no deviation from the job, left to his role.

 The nation as a whole, does his death condole.

 Our best memento to him is to set his goals roll.

P. Chandrasekaran.