Tuesday, June 2, 2026

வானுயர்ந்த வண்ணத்தமிழ்..

ஐூன் மூன்று 2026

நீ பிறந்த நாளினிலே,

நினைவுகளை மரமாக்கி,

கடும்வெயில் காலத்தின், 

கருணைநிழ லாக்குகிடுவோம்.

நன்மைகள் பலசெய்தோம்; 

நண்பர்கள் வஞ்சித்தர்.

தோல்விகள் புதிதல்ல;

எத்தனை பத்தாண்டுகள்; 

எத்தனை சாதனைகள்!

கல்வியும் மருத்துவமும் 

கண்களாய்க்கொண்டு,

கனிவுடன் ஆற்றினோம், 

காலநிலைத் தொண்டு.

உன்தமிழின் உயர்வோடு 

உதித்திடும் சூரியனால்

ஒவ்வொரு நாளும், 

பதித்திடும் ஏடுகள், 

பறைசாற்றும் வரலாறு!. 

"தளராதே உடன்பிறப்பே",

என்றுநீ கூறு.

தெளிவும் தீரமும், 

தேயாது இருக்கும்வரை, 

அன்றாடம் உதிக்கும் 

ஆதவன் போல், 

வென்றாலும் தோற்றாலும், 

வீழ்வதில்லை விரல்நுனியால்! 

சென்றாலும் செல்லாமல், 

நீயிருப்பாய் எம்முடனே!

ஆடைகள் மாறலாம்;

மேடைகள் மாறலாம்.

அணிகள் மாறிடினும்,

பணிகள் தொடருமிங்கே!

தமிழ்த்தாயை தள்ளிவைத்து, 

வள்ளுவனின் நிறம்மாற்றும், 

வழிக்குழப்பம் நீங்கிடவே, 

மழித்தலையும் நீட்டலையும், 

அழித்திடுவர் அருந்தமிழர்.   

ஜூன் மூன்றின் நாட்குறிப்பு, 

வானுயரச் செய்திடுமாம், 

வண்ணத்தமிழ் வரலாற்றை!      

ப.சந்திரசேகரன்.  

Saturday, May 16, 2026

போதையில் நின்று.

பாதை பழசெனில் 

போதையும் பழசுதான்.

"போதை வந்த போது 

புத்தியில்லையே"

எனப் பாடிய கவிஞன்தான்,

கிண்ணத்தை ஏந்தி 

வண்ணத்தில் நீந்தினான்.

நெஞ்சில் உள்ள நல்லதை, 

மிஞ்சிடும் போதை,

நஞ்சென நெறுங்கி

கொஞ்சிக் கொல்லுது.

பணமும் பதவியுமே 

பலமான போதையிங்கே!

புகழின் போதையில்

புதையும் நற்குணங்கள்.

ரசிகனின் போதையில்

ரகசியங்கள் ஏதுமில்லை.

நசுங்கிப் பிணங்களாய்

நடுத்தெருவில் வீழ்கையில்

நரபலிப் போதையே

சிரசினைத் தாக்குமாம்.

பிணங்கள் வீழ்கையில்

சுணங்கா மனதினுள்

சுர்ர்ரெனும் போதை.

வாழ்த்தின் போதையெல்லாம்

வீழ்த்திடும் விரல்நுணியில்.


உழைப்பவன் காய்ச்சுவதில்லை.

காய்ச்சுபவன் உழைப்பதில்லை.

கள்ளச் சாராயம் 

சட்டப்படி குற்றம்.

உள்ளச் சாராயம் 

ஊறிடும் போதையென!.

மதமும் மடமையும்,

மட்டையாக்கும் மனதை.

போதையில் நடக்கையில் 

ப்பதே நடனமாம்.

பாதை நேர்மையெனில்

நடனம்கூட  நடையாம். 

போதையில் திளைப்பவன்

நாதியற்றுப் போவான்.

நாதியற்றுப் போனாலும்

போதையின்றி வாழ்பவன்,

சூதுகள் கவ்வாது

நீதிவழிப் போவான்.

கீதையெனும் மூச்செடுத்து,

மூதுரைக் கடலில்

முத்தெடுத்து மீள்வான்.

ப.சந்திரசேகரன். 



Saturday, April 25, 2026

God in retreat mode

               

God's retreat is regrettably invisible, as God. 

The many in man, cannot draw any of godliness.

The worst treachery of mankind is framing God

 Into a fragmenting fantasy, and a divisive trench.

Today God does not appear in worship spots,

 Though we all visit them, in a fit of hallucination.

 Contamination of the conscience, is an act of contempt

  Thrown at God,with the least compunction of hurting.

 When healing quarters are bombed and blown off,

Guess, God's hands shaking, and taking a break.

Creativity celebrates violence of varied kinds,

To endow destructive temper, with new killer teeth.

Even game shows are gateways to blood bath.

Politics is a pool of lies, for fools to quench their thirst.

Religion's rapid theories are rabid rich, for a ruin.

New sermons are served, for a silly sinister world.

The long rope given by God has almost reached its edge.

We have abused God's liberty by creating a crude wedge.

From his retreat spot, God is looking through his telescope,

To see if there is at least a rock bottom redemption, in scope.

P. Chandrasekaran.

Monday, April 13, 2026

தேறிடும் திருவொளி.

இனிய சித்திரைத்திருநாள் மற்றும்
==================================
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
=================================

தேரிழுக்கக் கூடிடும் தெருவினர் எல்லாம்,

ஊருடன் ஒழுகுதல்,உயர்வுள்ளல் என்பர்.

யாருக்கும் யாரும் தாழ்ந்தவர் இல்லை;

மார்தட்டிக் கூறலே மானத்தின் எல்லை.

போர்தனை மூட்டிடும் போக்கிரி பலரும்,

சூரராய் முழங்கி சோர்ந்திடும் வேளையில்,

கோரமாய்த் தாக்கிய கொடுங் கணைகளால்

பேரறியா மக்கள் புதைந்தனர் மண்ணில்,


பாரினில் நல்லோர் பதைபதைத் திருக்க!

ஓரிரு நாடுகள் உலகையே உலுக்குதல்,

காரிருள் தன்னில் கடத்திடும் அமைதியை!.

பூரிக்கும் வெளிச்சம் பளிச்சென
ர்ந்திட,

வேர்களாய் மண்ணில்,வேள்விகள் ஊன்று!

தேர்கள் இழுக்கையில்,தேறிடும் திருவொளி. 

ப.சந்திரசேகரன்.

Sunday, March 8, 2026

Body Language

Folded hands spread respect and hope,

Unlike crossed fingers, raising a hunch.

Kneeling legs speak of surrender,

While kicking feet are fixed in savagery.

Staring is strikingly straight forward;

But ogling ousts decency from the eyes.

Further, an eyewash reflects absence of truth.

An eye for an eye, is a teething tale of revenge.


A hand wash is clinically healthy, these days.

Whereas washing off one's hands is similar to,

Deserting the bonding that the hands established.

Handshakes hail both diplomacy and drop off.

Hearsays honk invisible hatred and mistrust.

Some people literally turn deaf years to truth,

As they have earmarked their endearing time,

To hear unethical stories of fraud and falsehood.


Chest thumping is challengingly cheekier than

Shouldering responsibilities with righteousness.

There are knee-jerking reactions from rivals,

Who never join us in kickstarting new ventures.

Some headlines keep our heads down in shame,

While headstrong guys,hardly rise to the height of fame.

Body language as such, has neither text nor script.

Nevertheless, it spearheads a style of semantic shift.

P. Chandrasekaran.



Wednesday, February 25, 2026

செங்கொடிச் சிற்பி.



{அஞ்சலிமட்டும் போதாது;
ஆயுள் முழுமையும் வணங்கி
நெஞ்சில் நிறுத்துவோம்!}
 
 "தனக்கென்ன முயலா நோன்தாள்"எனுமோர்

பிறர்க்கென வாழ்ந்ததோர் பிறவியின் பெருமை, 

நிறைகுடம் ஆகிட நிலமெல்லாம் நெகிழும்; 

நல்லக்கண்ணு எனுமோர் பெயரே நல்லதாம்!

 

நன்மையின் எல்லைக்குள் நாளும் வாழ்ந்து, 

மென்மையாய் மனிதருள் மெய்யோடு கலந்து, 

மேன்மையை புகட்டிய மாசிலா மனிதராம்;

உண்மையின் குரலாய்,உணர்வின் புனிதராம்!

 

அரசியல், பாசறையின்  ஆயிரம் கரங்கள்

உரசிடும் வண்ணம்  ஊர்வலம் காட்டும்

பரிசெனப் பதவியும்,பணத்தின் போர்வையும், 

சிரசினைத் தாக்கி சிறுமைகள் கூட்டும்.


தரிசுகள் இல்லா நிலத்தினை போன்றொரு, 

நெரிசல் விலக்கி நேர்மையின் நகலினை,   

முரசுகள் முழங்கிட செங்கொடி தாங்கி, 

அரசுடன் இணைந்து அஞ்சலி செலுத்துவோம்! 

ப சந்திரசேகரன்.     

Friday, February 20, 2026

கிழவனும் கிழவியும்

கிழவன்  மறப்பான், 

கிழமைகள் தனையே. 

கிழவி அறிவளோ,

கிழவன் நிலைமை. 

கழுவிடும் மீன்களில்

நழுவிடும் மீன்களென,

வழுக்கிடும் கிழமைகள்.

விழித்திரும் வேளையில்.

கழிந்த காலத்தின் 

கிழமைகள் தனிலே ,

கொழித்தவை எவையோ,

கழித்தவை எவையோ! 

கழித்ததும் குழித்ததும்

அழிந்து போகுமோ 

அழியா மனதில் !

வழித்தடம் பலவாம், 

வாழ்வின் வீதியில்.

விழுமியம் வழுவா

பழுதிலா படிப்பினில்,

இழித்ததும் இல்லை; 

பழித்ததும் இல்லை;  

செழித்து வாழ்தலும் 

ஒழித்து வாழ்தலும்  

சுழித்ததோர் விதியோ

சூழ்நிலைக் கதியோ!

விழித்து விறைந்து

உழைத்த கிழமைகள்,

கிழவனும் அறிவான்; 

கிழத்தியும் அறிவாள்.

கிழமைகள் மறப்பினும்,

பழமைகள் மாயுமோ?

முழுமையே முதுமை.       

ப.சந்திரசேகரன்.