இனிய சுதந்திரத்திருநாள் வாழ்த்துக்கள்.
======================================
எண்பதை எட்டுது எம்தசேச் சுதந்திரம்.
முன்பகை நீக்கிட,முயலட்டும் தந்திரம்.
அன்புடன் இயங்கட்டும் அரசு இயந்திரம்.
தன்பலம் கூட்டலே தரணியில் நிரந்தரம்.
பேச்சின் பெருஞ்சுவைப் பெருமிதம் மொழியே!
மூச்சுக் காற்றதன் தூய்மையின் வழியே,
ஏச்சினைக் குறைத்திடின்,இறங்கிடும் பழியே;
மாச்சர்யம் கடக்கும்,மொழியதன் விழியே!
படிக்கும் பாடங்கள் பழையதும் புதியதுமாய்,
இடித்தும் இசைத்தும் இயக்கிடும் சமத்துவம்.
தடித்ததோர் ஆணவம் தன்னிலை அறிந்திட,
துடித்திடும் உண்மை உயர்த்தும் உரிமையை!
உரிமைகள் உயர்ந்து ஔியினை கூட்டி
சரியெது தவறெது,நற்சான்றுடன் கூறும்!
பரிவினைப் பெருக்கும் பயிரே,சுதந்திரம்.
பிரிவினை போக்கும் பசுமையே, சுதந்திரம்!
ப.சந்திரசேகரன்.

No comments:
Post a Comment