Wednesday, August 26, 2026

இரவும் பகலும்

இளமை இருக்கையில்

இரவைப் பகலாக்கலாம்.

முதுமையின் முனகல்

பகலை இரவாக்கும்.

மேகங்கள் இருண்டுவர,

பகலுக்கு போர்வையிடும்.

இரவின் இருளை

பவுர்ணமி இறக்கிவிடும்.

பகலிலும் இரவிலும்,

பலப்பல கனவுண்டு.

பகல்கனவு பலிக்காதெனில்

இரவின் கனவுகள்

பகலில் பலிக்குமோ?

வெளிச்சத்தில் குளிக்கும்

பளிச்சிடும் இரவுகள்

இருட்டறைப் பகலினை

இரட்டிப்பு ஆக்குமோ?

இரவுக்கும் பகலுக்கும்

ஒருநாளும் இறப்பில்லை.

இறக்கும் பொழுதுகள்

இரவாயினும் பகலாயினும்

உயிர்களின் ஓய்வீற்கு

செயற்கரிய செய்யுமாம்.

இரவு பகல்பாரா

கருணைமிகு உழைப்பில்

அரும்புவது உயர்வாம்.

பாரியின் தேரினால்

முல்லை பிழைத்தது

பாரினில் பொழுதுகள்

பகலென இரவென

வல்லுயிர் ஓம்பும்.

தில்லையில் சிவனோ

நெல்லையில் சிவனோ

எல்லைத் தெய்வமாய்

இரவிலும் பகலிலும்

பல்லுயிர் காத்திடும்

பொழுதுகள் பலவும்,

தொழுதிடும் திசைகளே!

ப.சந்திரசேகரன்.





3 comments:

  1. "....இரவுக்கும், பகலுக்கும்,
    ஒருநாளும் இறப்பில்லை. இதுவரை படித்துப் பார்க்காத, கேட்டு இரசிக்காத, *என் ஆசானுக்கே உரிய* அநாயசமான சத்திய வார்த்தைகள். 🙏

    ReplyDelete
  2. Thank you for sharing thwith me, dear sir. I found it deeply meaningful. I especially liked the way the poem connects day and night with youth and old age, dreams and reality, and the continuous cycle of life. The thought that neither day nor night truly dies, but that every moment has a purpose in sustaining life, is very profound. The references to Pari, Mullai, and Lord Shiva also beautifully connect nature, compassion, and spirituality. It is a poem that makes one pause and reflect on the value of every passing moment. Thank you for sharing it with me.

    ReplyDelete
    Replies
    1. Thank you Selvan for your thought provoking review of my poem.

      Delete