Thursday, January 30, 2020

பசுவும், இசையும்.

.

    இன்றைய இந்து ஆங்கில நாளிதழில் T.M கிருஷ்ணா அவர்களின்"Keeping the cow and brahmin apart" என்ற வித்தியாசமான கட்டுரை படித்தேன். பசுவதைச் சட்டமும், பசுவதைக்கெதிரான இந்துமத குரலோசையும், கடந்த சில ஆண்டுகளாக நாம் அறிந்த ஒன்றே! ஆனால் இக்கட்டுரையில் அர்த்தமுள்ள முரண்பாடுகள் குறிப்பிடப்பட் டுள்ளன. பசுவின் புனிதத் தன்மை பேணும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த மிருதங்க மேதை பாலக்காடு மணி அய்யர் அவர்கள், தரமான மிருதங் கங்ளை ஆய்வு செய்து வாங்குவாராம். ஒருமுறை மிருதங்க தோலுக்கான விலை பேசுகையில் மிருதங்க உற்பத்தி செய்யும் வணிகத்தைக் சேர்ந்த நபர் ஒருவர், உயிரோடு ஒரு பசுவினை கொண்டுவந்து நிறுத்தி, அப்பசுவின் தோலுக் கான விலை ரூபாய் நூற்று இருபது என்றும் கூற, திரு மணி அய்யரும் அவ்விலைக்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.           

 இதில் முரண்பாடுகள் என்னவெனில், பசுவதையை எதிர்ப்பவர்கள், பசுத் தோலில் உருவாக்கப்படும் இசைக்கருவிகளை,அவர்கள் இசையெனும் பெயரில் பயன்படுத்த நேரிடுகிறது என்பதும், வேறு சாதியினர் தங்கள் கால்களுக்கு இடையே வைத்து,பசு,எருமை,மற்றும் ஆட்டுத் தோல்களினால் செய்யும் இசைக் கருவிகள், பூஜையறையில் வைக்கப் படுகின்றன என்பதாகும். 

  மேலும், இவ்விஷயம் குறித்து பாலக்காடு மணி அய்யர் திரு இராஜகோபாலாச் சாரியை அணுகி இக்கட்டான தனது சந்தேகத்திற்கு விளக்கம் கேட்கையில் இராஜாஜி அவர்கள், எல்லாவற்றிர்க்கும் ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக் கூடாது என்று சொன்னதாகவும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட் டுள்ளது. இக்கட்டுரையைப் படிக்கையில், முரண் பாடுகளின் பக்கங்கள் நிறைந்ததே வாழ்வியல் புத்தகம் என்பது மீண்டும் தெளிவாகியது. கண்ணப்பனார் கதையை மனதில் கொண்டு, இந்து மதத்தை பார்த்தால் மட்டுமே, தோளில் அன்பைத் தாங்குவதே சிவமென்றும் தோளில் பகையேறிட நாம் சவம் என்றும் புரியும்!..



ப.சந்திரசேகரன் 

Saturday, January 25, 2020

இந்தியக் குடியரசு

{இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்}
                          26/01/2020

விடியாது போராடி, 
விடியலைக் கண்டோரின், 
குடியரசுக் கதையறிவோம்! 
தடிகொண்டு எழுந்தோறும் 
தன்மானம் காத்தோரும், 
தளராது தடைகளைய, 
படைக்கத்த பங்கியர்கள் 
படிந்ததொரு பழங்கதையே, 
குடியரசுக் குலக்கதையாம்! 

குடியுரிமை புதுக்கதைகள் 
புழுதியினைப் பரப்பிடவே, 
குறைகள் பதிவாகிடுமோ,
குடியரசின் குறிப்பேட்டில்? 
படிகள்பல கடந்தவரின்  
படிவங்கள் மாறிடுமின்,
வெடிக்கும் விரிசலில் 
குடியரசுக் கொண்டாட்டம் 
குறுங்கதைகள் படைத்திடும்! 

ஓடியாக் கிளைகளிங்கே 
ஒற்றுமை மரமென்பர்; 
ஒடித்துக் களைகையிலே 
அடிவேரும் அழுதிடுமே! 
மடிப்பிச்சை கேட்பதுபோல் 
மறுவாழ்வு கேட்டிடுவர், 
குடியரசில் புலம்பெயர்ந்தோர்;
அடிவயிற்றைக் கலக்குவதே 
அகதிகள் ஆகும்வழி.

நடுநிலையில் கால்பதித்து, 
நாட்டின்நலம் நாடிடுவோர் 
நாளெல்லாம் வேண்டுவது,
நடிப்பறியா நல்லோரின்,
படிப்பறிந்த பழுத்தோரின்,  
படிப்பறியா பாமரனின், 
துடிப்பறிந்த தோழமையில் , 
கரம்கோர்த்துக் கொண்டாடும், 
குடியரசின் குலக்கதையே.  

கொண்டாடு கொண்டாடு 
குடியரசைக் கொண்டாடு! 
அண்டை அயலாரையும்  
அரவணைத்துக் கொண்டாடு
 ப.சந்திரசேகரன் 

Thursday, January 23, 2020

Windows

Media open our windows to the world,
To bring sounds and visuals into our fold,
Like moths,mosquitoes and cockroaches.
Half baked,or made-to-exist facts,
Pollute our eyes and ears,in fullest form.

Smiles and tears are each one's windows,

Opening one's shutters to be seen,
As patterns of minds,with slices of behaviour.
Hidden emotions bind blinkers to eyes,
Putting one's mind,behind the bars.

The tongue is the worst of all windows,

Letting private thoughts out,to subvert society.
The tongue is a three-part window; 
As a truant,in times of want of a witness,
A toppling trouble maker when all is well,
And a towering trouble shooter,at tough times.

Windows can not make a lone leeway for

One way traffic,to let in or out,vagabond thoughts,
Vitrifying words and deeds without application.
A window that brings us fruitful air of freedom,
Secures us,our sense of belonging,truly fulsome.
     P. Chandrasekaran

Tuesday, January 14, 2020

கோலங்கள்

{இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்} 

தாய்வரைந்த கோலம் கருவறையில்;
சேய்தரித்த கோலம் முலைப்பாலில்.
ஓய்வறியா உழைப்பிற்கு வெகுமதியாய்
காய்கனிந்த காட்சியெலாம்  இனிப்பாகி,
பாய்விரித்து பந்திவைக்கும் கோலங்கள்!
நோய்நொடியை புடைத்தெடுத்து வீசிடவே,
வாய்மணக்கும் புன்னகை பூக்களெல்லாம்,
பாய்ந்துவரும் பொங்கல் கோலங்களாய்.

உரசுகின்ற  குடியுரிமைப் புள்ளிகளால்,
அரசியலின் கோலமுண்டு ஆங்காங்கே!
சிரசினிலே சிந்தனைகள் சிறகடிக்க,
வரிசையாய் வண்ணமுறும் கோலங்கள்.
தரிசுநிலம் தானியத்தை தத்தெடுக்க,
முரசுகொட்டி பொங்கிவரும் கோலமிங்கே!
அரிசிமணி ஆனந்தம் பொங்கவைத்து,
விரிசலுக்கு விடைகொடுக்கும் கோலங்கள்.

பதர்களை பகுத்தறிவால் புறக்கணித்து,
பதலமுடன் நெற்குவியல்  சேர்த்துவைக்க,
கதிரவனும்,கதிர்துறந்த கழனிகளும், 
எதிரெதிராய் காட்சிதரும் கோலங்கள்.
பொதுவுடமைக் கோலங்கள் படையெடுக்க,
அதிர்வுகளாய் அரங்கேறும் தைப்பொங்கல்.
முதிர்ந்தமனம் முழுநிலவாய்ப் பொலிவுற்று, 
உதிர்ப்துவே வேளாண்குல  கோலங்கள். 
 குறிப்பு:- பதமுடன்-- கவனமுடன்

ப.சந்திரசேகரன் . 

Tuesday, January 7, 2020

The Toes

{Dedicated to the labouring class}

The toes taunt not the fingers,
For being dispossessed of their
Natty nails,that reigned as crowns.
But sleek fingers celebrating their style,
Sneer at the toes,for their slimy nails,
Shamefully hidden in shoddy footwear.
The body is basically bothered about
Its ostensible outer lounge and lobby,
As the social ladders'down look hobby.
The toes are ever an ugly underdog army,
Supplicating to the charm of what is above,
By meekly making moves in a silly shove.
Even nail polish norms exist,to fit the fingers 
And not the toes,where tough Taurus lingers.
Ruling fingers will rudely pinpoint their foes.
Toeing toes,will never wail about their woes.
Feet further not,the footprints that they make.
Forefingers focus on the footprints,fit to take.
There lies a world,between the fingers and toes,
Claiming thumb's gains,at the cost of toe's throes.
P. Chandrasekaran.


  


Monday, December 30, 2019

பொற்காலக் கனவுகள்

            {இனிய புத்தாண்டு 2020}
வரலாற்றி னுள்ளே நதியொன்று ஓடும்
விரைந்திடும் நதிகள் வளைவுகள் தேடும் 
அரியதோர் வளைவுகள் ஆற்றல் கூட்டிட,
ஆயிரம் ஆண்டினை,பொற்கால மென்பர்.
பாயிரம்  புனைந்திடும் கவிகள் எவரும்,
வாய்மையின் வரிகள் மாற்றுவ தில்லை.
மாய வலையினில் பின்னிடும் அரசியல்
தூய்மைத் தரியினில் தூவிடும் சாயம்.

பொய்யிலா வாழ்வின் பொற்காலக் கனவுகள்,
மெய்யனத் தாயினை தழுவிடும் குழந்தையாய் 
வையத்துள்,வரலாற்று வேர்கள் ஊன்றிடும்.
இரண்டென ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின், 
திரண்டுப் பெருக்கயில்,இருபதும் னிக்கும்.
பரணியில் பேணும் பழமையின் பலமெலாம்
தரணியின் சரித்திரம் தகர்ப்போர் பலரையும் 
இரணியன் ஈட்டிய தூணுடைத்து வீழ்த்துமாம்
ப.சந்திரசேகரன் . 

Twenty Twenty

                  Happy New Year 2020.
T 20 is no cricket teaser,but a great cricket event.
It is a synoptic show of the creamy,cricket game,
Leaving solid memories of the Samsonite strokes.
'Twenty-20'fabricated word and number,as a film
That brought together,a cluster of cheering actors,
Frame by frame,scene by scene,in an action galore.
Twenty Twenty is not the cardinal number repeated;
It is a cardinal calendar,conceived to catapult hopes.

In the line of the winners of a game and a blockbuster,
Comes the twentieth anniversary of the new millennium,
That was born with the pangs of a bug,baffling its birth.
The bug was gone and a bunch of brand new bytes shone.
Ten by ten,the yeasty years have flown fleeting,in a flick,
Tracking now,to Twenty Twenty,for many a classic click.
     Note:- 
    yeastycharacterized by upheaval;restless and turbulent.
P. Chandrasekaran