Monday, November 27, 2023

Where do we fail?

Where do we fail?
Monday to Sunday
Mind makes its myriad marches,
Cutting across credits and debits.
Though positives are a passion, 
Negatives navigate through the nerves.
Where do we fail, 
Nobody knows.
And nobody asks.
Because nobody is ready 
To own when, where and how 
They went wrong.
Introspection also insults one's ego.
Nobody wants their self-esteem to forego.

Where do we fail?
Is it forgetting to call up the committed,
Or failing to share food with the buffeted?
Is it anger unbridled,
Or hunger of others unfed?
Is it words that hurt rather than heal,
Or herds that go on a rampage in social media,
Against those who hold different ideologies?
The pride of a slap thrashed,ruins
The side of inner warmth that one can hold.
The arrogance of power plays its awkward games,
That pushes others' fitness into flames.
The failure to read other's mind
Is the biggest failure of all.

Where do we fail?
In our conjugal credibility or compatibility?
In our parental parameters or filial devotion?
In our sibling intimacy or friendly fraternity? 
In social hobnobs or jobs?
Do we shirk,lurk and jerk to fail in work?
Failures happen to perfect oneself;
But perfect failures never look for reform,
By betraying the body,or stifling the soul.
Some think fallibly,that they never fail,
While some curse their failings full.
If we fail as individuals, 
It is a ruin,sometimes reversible.
If we fail as humanity,
The fall is failure in its finality.

P.Chandrasekaran. 








Monday, November 20, 2023

நீதியறைக் கதவுகள்.

ரயில்கள் அத்துமீறி

தடம் புரண்டன.

ஆனால் சட்டமெனும்,

'சாக்கு'மூட்டை சரக்குவண்டி

சம்பிரதாயம் பல கடந்து

தண்டவாளம் தாண்ட,

புரட்டுச் சிக்னல்கள் 

புதுத்தடங்கள் படைத்தன.

சதித்திட்டங்கள் வகுத்தன.


அரசியல் புரிபவருக்கு 

ஆதிகேசவன் மூளையுண்டு.

ஆட்டிப் படைக்கும் 

ஆலகால விஷத்தில்

ஆகாதவன் சிக்கிக்கொள்வான்.

நஞ்சுண்ட மூர்த்தியிடம் 

நல்லவராய் நடிப்போர்க்கு,

நளினமாய்த் தப்பிக்க,

நாலுதிசை பாதையுண்டு.


"பாலும் தெளிதேனும் 

பாகும் பருப்பும்,

நாலும் சேர்ந்துணக்கு 

நான்தருவேன் நீ எனக்கு

சங்கத்தமிழ் மூன்றும்தா"

எனப்பாடிய மூதாட்டிக்குரலில்

மூழ்கிய முதலோனே,

சூதாட்டக் களம்காணும் 

சூழ்ச்சிச் சதுரங்கம்,

சட்டத்தின் பாதைதனை 

சித்துவழித் தடமாக்கி,

கிட்டியவன் கோழையெனின்

கட்டி அணைத்திடவும்,

முரட்டுக் காளையெனில் 

மூக்கணாங் கயிறிட்டு

கட்டி இழுத்திடவும்,

வட்டமிட்டு வட்டமிட்டு 

வெட்டி விளயாடிடுமாம்!.


கொம்பில் குறைகொண்ட

தும்பிக்கை நாயகனே

நீரிலுன்னைக் கரைத்தாலும்

காரியத்தின் கதவுக்கு

உன்மதியே திறவுகோல்.

சட்டத்தின் வண்டியினை

சரி தடத்தில் இழுத்துவா!.

நீதியறைக் கதவுகளை

சூதழித்துத் திறந்திடுவாய்.

ப.சந்திரசேகரன்.






Tuesday, November 14, 2023

Oh! My Money,Money.

The forests do not ever seem to tremble 

When the lions in jungles roar.

Nations do not ever seem to grumble 

When tycoons their economy gore.

Currency's values trounce and tumble;

But wealth has its sweet secrets in store.

Borrow cash to spend or save it to lend

Money is a flexi bond that is easy to bend.


Hush money or Swiss money,money is money;

Without money,life of many,becomes baloney.

Yesterday's black is laundered white in a gunny.

Devalued currency turns into,doctored stepney.

Conversion of religion is questionable to many;

But currency's conversion is consumable honey.

Oh my money,you are music to ears,as euphony.

Oh my money,you make the world blithe&bonny.

P.Chandrasekaran.






Sunday, November 5, 2023

எள் முளைத்த இடமெல்லாம்

 எள்முளைத்த இடமெல்லாம்

எருக்கஞ்செடி முளைக்கிறது.

சொல் முளைக்கும் வேளையிலே,

சொல்லோடு முள் முளைக்கிறது.

அக்கறை இல்லாதவரின்

கொக்கறிப்பு குடைச்சலில்,

நிக்கிற இடமெல்லாம்

நெருஞ்சி ஆகிறது.

சத்தம்போட்டு உரைத்தாலும்

சத்தியத்தின் ஓசைக்கு

சங்கே மிஞ்சுகிறது.

சாரை சாரையாய் 

பொய்க்கால் குதிரைகள்,

ஊரைச் சுற்றிவந்து

உண்மைச் சவாரிகள்.

எட்டுப் போடச்சொன்னால்

ஏட்டிக்குப் போட்டிபேசும்

எட்டுக்கால் பூச்சிகள்.

இடித்துப்பேசும் இடதுசாரியும்

வழுக்கிப்பேசும் வலதுசாரியும்

படித்துப்படித் துரைத்தாலும்

பாசாங்கு எதிலென

கேட்போர்க்கே கேளிக்கை.

உள்ளுறங்கிய மிருகங்கள்

உக்கிரமாய் உலாவர,

தள்ளுமுள்ளு காட்சியிலும்

தில்லுமுல்லே தீவிரம்.

எலிப்புளுக்கை நிறைந்திருக்க,

எள்ளுக்கே தட்டுப்பாடு.

எள்முளைத்த இடமெல்லாம்

கள்ளிச்செடி கழனியாச்சு.

ப.சந்திரசேகரன்.




Wednesday, November 1, 2023

Killjoys

With each war, 

A fresh revenge impulse is instilled.

With each war,

A new generation of orphans is chilled.

The unfathered,unmothered,unchilded lot,

Are the voiceless victims of a vulgar holocaust.


Power is the pepper and salt of the war omelette,

Falling as foul thoughts,into its warrior's gullet.

Water,food and light,vanish in the brutal bombs,

That deny tombs for those,killed without qualms.


With each war,

Death mongers team up with their killjoy calls;

With each war,

Terrorism and rage,bundle bodies without palls.

World watches all these frequent killjoys spree,

As if watching cricket matches with tickets free.

P.Chandrasekaran.

Thursday, October 26, 2023

The tale of two worms.

Life's cinema gives call sheets

To two kinds of worms,

On terms of lease lopsided.

One that of a small-time hero;

The other,rooted to the soil

With a sense of belonging.

One that glows and the other that writhes.

One is off the earth,while the other owns it.


The worm of the earth is jealous 

Of the the worm that glows with sparkles, 

Which garner a galaxy of mock stars

Clustering into a mundane fermament.

The glowing worm longs for the longer life

Of the earth worm,and its resilience;

It yearns for the rival's laid back moves 

In a zigzag pattern,kissing the earth all along.


Like cinema with its popularity and pain,

Life's two worms pass on to mankind's gain,

The tale of a worm led to its flickering flight,

With its heroic glows,helping the dark night;

And that of the soil bound worm on its coil,

That laboriously stretches its length,in a toil. 

Short or long,life is a treatise of tricky tales,

With its abstract of precepts in myriad scales.

P.Chandrasekaran. 


Sunday, October 22, 2023

களப்பணியே கலைவாணியின் களிப்பு..

(இனிய ஆயுதபுசை வாழ்த்துக்கள்.)


கலைவாணி களத்தில் தொழிலே எழில்.

படிப்பே பண்புறும் வாழ்க்கைப் பிடிப்பு.

நடிப்பிலா நடப்புகள் நாடியின் துடிப்பு.

நலமுடன் நாவினில் உதித்திடும் சொற்கள்

நன்மைகள் பயத்திட நாளும் படர்ந்திடின், 

குணமது கோவிலின் கோபுரம் ஆகும்.


வீரம் என்பது நியாயம் கோரல்.

நீதியின் நிசங்கள் செல்வமாய்ச் சேரல்.

புத்தகப் படிப்பும் வித்தகர் பிடிப்பும்,

எத்தனை கேள்விகள் எதிர்ப் பட்டாலும்

மெத்தனம் இன்றி மேற்படி ஏறி,

சத்திய வெளிச்சம் சமூகம் காணும்.


கல்வியும் செல்வமும் வீரமும் இணைந்து,

பொல்லாத் தீமைகள் பூமியில் களைந்து

பத்துநாள் பண்டிகை பரவசம் படைத்து,

அத்தினைக் கடக்கா,அறம்பல உரைக்கும்.

மூவகை திறமைகள்,மூலிகை மணமுடன்

தூவிடும் மலர்களில்,நோயெலாம் மாறும்.

ப.சந்திரசேகரன்.