Friday, August 21, 2020

மூக்கணாங் கயிறு.

ஆக்கம் கெட்டிடின்,அனுபவம் கெடுமாம்;
தூக்கம் கெட்டிடின்,தோப்பில்தனி மரமாம்.
நாக்கின் நமைச்சலில் நழுவிடும் சொற்கள்,
தீக்கிரை யாக்குமாம்,தேன்கூட் டுறவை.

பாக்கள் பலவும் புனைவோர் அவையிலும்,
வாக்கினில் பிறழ்வர்,ஒட்டக் கூத்தனாய்.
தாக்கிடும் கொம்புடை,குறும்புக் காளையை,
தேக்கிடும் தடுப்பே,மூக்கணாங் கயிறு.

பூக்களின் நாரென புதுமணம் பரப்பியே 
மூக்கணாங் கயிறது முரண்டுகள் களையுமாம்;  
காக்குமோர் கயிறுன்,காளையின் வீரமும்
ஊக்கமாய் மோதுமாம்,உள்மூச்சு வாங்கியே!

மூக்கணாங் கயிறெனும் திருமணக் கூடலில்,
சீக்கிரம் இழைவது சேவலோ,கோழியோ? 
போக்குகள் மாறிடும் புதுவழிச் சாலையில், 
தூக்கிடும் சுமையெல்லாம்,தூரத்து சுகமோ?
    
                                                      ப.சந்திரசேகரன் . 

Friday, August 14, 2020

Freedom Means More

  {Happy 74th Independence day}

        {15th August 2020}

Our country was not born this day;

Invaders were fought against and driven out,

Through decades of drilling episodes.

Independence is not a concept but a feeling.

Existing and exceeding ills,hurt this feeling;

Daily toxins,released by infected minds, 

Invade and pollute the air of independence.

Brewing conflicts of religion and language,

Batter the butter into pieces,with little scope

For a free,deep breath, at each one's space.

Binoculars are used to spot historical dots,

As missing masterstrokes of mainstream heroes.

New stones are laid to inscribe forgotten names.

But the pride of the hour is the holistic grasp 

Of long drawn disputes,with a judicial score. 

Between the Pandemic and the Pan India plans,

God has reassured his most believed,Main Spot,

To auger hopes,for injecting the vaccine of unity. 

Let our traditions outwit the temper of politics,

Making our freedom mean truly, what it depicts.

P. Chandrasekaran.

  



Sunday, August 9, 2020

A Mammal in Mixed Form

If man were a crazy pest like a cockroach,
He would have many cracks to approach.
If he were a wary,winged bird,
He would say many a fledged word.
If he were a silly,slimy worm,
He would have a 'flexible' term.
If he were a sinister snake,
He would give many,a shake.
If he were a'lofty'lizard,
He would be called a wizard.
A centipede if he ever were,
He would cause a fright,rare.
If he were a cringing,lousy leech,
He would let others' blood,bleach.
If he were a caterpillar of jerking horror,
He would cater to itching tales of terror.
Birds,pests and reptiles are seen with a stare,
By man's mixed and mindless mammal flair.
Look!man is pest,bird and reptile in single fold,
With many of his crazy,cockroach tales,untold.
P.Chandrasekaran 
  

Monday, August 3, 2020

கண்ணீர் கதகளி

கண்களில் கண்ணீர் கதகளி ஆட்டம்; 
காரணம் கரைந்து  காரியம் கூட்டும். 
பண்களில் படரும் உணர்வின் ஊட்டம், 
போரிடும் களமென காட்சிகள் காட்டும்; 

ஆனந்த அதிர்வுகள் ஆர்ப்பரித் தாடவும், 
தானந் தர்மத்தின் பலனெனக் கூடவும், 
வானந் தெளிவுற சிதறிடும் மேகமாய், 
பானந் தெளித்தலோ கண்ணீர் கோலம்? 

சோகம் அடர்ந்து சொடுக்கிய சிந்தனை, 
வேகம் எடுத்து விளம்பரப் படுத்திட, 
ஊகம் ஒளித்து,ஊற்றெனப் பெருகிடும், 
தாகம் தணிக்கா,திரவமோ விழிநீர்?.
  
உதைக்கும் நிகழ்வுகள் உலக்கை போன்று  
பதைக்கும் நெஞ்சினை உரலென மாற்றிட, 
சிதைவுறும் சிரசது நர்த்தனம் புரிகையில், 
கதைகள் சொல்லுமோ,கண்ணீர் கதகளி?. 
 ப.சந்திரசேகரன்.

Monday, July 27, 2020

Zoom Meeting

God called for a zoom meeting
To discuss the cranky COVID19.
He gave CORONA as ID
And 'Heal' as Pass word.
The pass word seemed to be
A mix up of the first three letters
Of Heaven and the last of Hell.
Humans across the world,
Hurried to sign up for the meet.
The haves as usual,had no issues
To log on to their myriad devices.
From their hideouts,they heaped
Praise on God and pleaded for a way out.
But the have nots raised their voices,
About poverty and starvation,
Surpassing the pressures of the pandemic.
God could see the slipshod strokes
Of Statistics on numbers of all kinds.
After all,God knows the actuals
Knocking at his doors,on a flash news basis.
God's concern is about the shrinking space
In Heaven and Hell,to accommodate
The souls of the dead,in a roaring row.
The soil is better placed to swallow bodies,
Than the space in Heaven and Hell, 
To put the souls to rest in peace or revolt.
God proposed a lockdown for Heaven
To prevent infection from new entrants.
But he let Hell remain open,like liquor shops
And shut down abruptly,the Zoom Meet.
P.Chandrasekaran.

Monday, July 20, 2020

விட்டுப்பிரிகையில்

விட்டுப் பிரிகையில் 
விட்டுக் கொடுப்பதை, 
விட்டுக் கொடுக்காது 
விட்டுப் பிரிவதோ? 
கெட்டுப் போகையில் 
கெட்டுப் போகாது, 
கெட்டிக் காரனாய் 
விட்டுப் பிரிவதோ? 
திட்டிய தீயோரை,
கொட்டம் அடக்கி 
பெட்டிப் பாம்பாக்கி 
விட்டுப்பிரிவதோ?
முட்டிய கன்றது 
முட்டிய மடிதனில் 
கிட்டாப் பாலென, 
கிட்டாப் புகழினை 
விட்டுப் பிரிவதோ?   
சட்டிப் பானையில் 
ஒட்டிய பருக்கையை 
தட்டி உடைத்தென, 
விட்டுப் பிரிவதோ? 
வட்டமாய் வரிசையாய் 
வாட்டிய வாழ்வினை, 
எட்டி உதைத்து 
விட்டுப் பிரிவதோ
வட்டியும் அசலுமாய் 
கொட்டிய பணமெலாம் 
கொட்டிச் சிரிக்கையில் 
விட்டுப்பிரிவதோ
பெட்டியில் பணமிலா 
பெருமிதக் களிப்பில், 
முட்டையின் ஒடென 
விட்டுப் பிரிவதோ?
எட்டாத் தொலைவினில் 
ஈட்டிடும் பிள்ளைகள் 
இறுதிச் சடங்கில் 
எட்டா வண்ணம், 
விட்டுப் பிரிவதோ?  
கட்டையில் போவதும் 
காரினில் போவதும் 
கெட்டியாய் உயிரினைப் 
பற்றிடா  உடலினை
'கெட்டியாய்ப் பிடி'யென 
தோளினில் சுமப்போர் 
அட்டையாய்ப் பற்றி 
அந்தமாய் வைத்திட, 
சட்டியை உடைத்தபின் 
விட்டுப் பிரிவதோ
ஒட்டிய உறவுகள் 
ஒட்டுதற் கஞ்சிட  
கெட்டதோர் நோயினால் 
கெட்டதோர் உடலென, 
வெட்டியான் தீண்டாமல் 
விட்டுப் பிரிவதோ?
 ப.சந்திரசேகரன் . 

Wednesday, July 15, 2020

கண்டம்

நீரில் கண்டமோ?,நெருப்பில் கண்டமோ?,
நோயில் கண்டமோ?,வாயில் கண்டமோ?,
ஊரினில் ஒவ்வொரு நாளும் உலவிடும், 
ஓய்ந்திடா உயிர்பலி,உலுக்கிடும் கண்டமே !

காவலில் கண்டமோ?ஏவலில் கண்டமோ? 
காரிருள் கடக்கையில் காலிடறிக் கண்டமோ?
ஆவலில் கண்டமோ?ஆருடக் கண்டமோ? 
ஓரிடம் ஒழியா ஊழ்வினைக் கண்டமோ? 

மத்தள இடியென மானுடம் சகிப்பது
மாரகம் தடுத்திடும் மரணப் போராம்!  
தத்தளித்தே தினம் தன்னுயிர் காத்திட,
போரிடும் பூமியில்,புதைது கண்டமே!

பாலியல் பலிகளும்,பாய்லர் பலிகளும்,
பாதாளச் சாக்கடை,பறித்திடும் உயிர்களும்,
சாலையில் சகஜமாய் சரிந்திடும் உயிர்களும், 
சேதாரம் கூட்டிடும் சிசறுக்  கண்டமே!

பாரினில் கண்டம் பலப்பல இரகமாம்; 
மாயமாய் வாழ்வினில் மடிவது எல்லாம், 
நேரிடைக் காட்சியாய் நெட்டிடும் நிகழ்வில்   
மாய்ந்திடும் மாந்தரின் மயிரிழைக் கண்டமே!
ப.சந்திரசேகரன் .