{அஞ்சலிமட்டும் போதாது;
ஆயுள் முழுமையும் வணங்கி
நெஞ்சில் நிறுத்துவோம்!}
பிறர்க்கென வாழ்ந்ததோர் பிறவியின் பெருமை,
நிறைகுடம் ஆகிட நிலமெல்லாம் நெகிழும்;
நல்லக்கண்ணு எனுமோர் பெயரே நல்லதாம்!
நன்மையின் எல்லைக்குள் நாளும் வாழ்ந்து,
மென்மையாய் மனிதருள் மெய்யோடு கலந்து,
மேன்மையை புகட்டிய மாசிலா மனிதராம்;
உண்மையின் குரலாய்,உணர்வின் புனிதராம்!
அரசியல், பாசறையின் ஆயிரம் கரங்கள்,
உரசிடும் வண்ணம் ஊர்வலம் காட்டும்.
பரிசெனப் பதவியும்,பணத்தின் போர்வையும்,
சிரசினைத் தாக்கி சிறுமைகள் கூட்டும்.
தரிசுகள் இல்லா நிலத்தினை போன்றொரு,
நெரிசல் விலக்கிய நேர்மையின் நகலினை,
முரசுகள் முழங்கிட செங்கொடி தாங்கி,
அரசுடன் இணைந்து அஞ்சலி செலுத்துவோம்!
ப சந்திரசேகரன்.

No comments:
Post a Comment