Thursday, June 13, 2019

Wheeler Dealers

Wheeler dealers globally position their tracks,
Navigating several cracks,to clinch their deals.
They warily keep watching their weird wheels,
Driving out of kilter,through diplomatic knacks.

They dexterously drive the present to the past,
By digging out dead issues,to burst a fresh blast.
Diversion is an art in the course of deft driving,
To distract the watch dogs to wasteful barking.

Rewriting history is at times a hypnotic exercise,

Sedating the soil with old tricks as a new device.
If silence is the response to disruptive sidetracks,
It speaks of jolting revolts from long drawn stacks.

While dealers in wheels,delight in their daily sale,
Wheeler dealers smartly shuffle their shady deeds.
Wheels have preferences for tractable road speeds;
But wheeler dealers sidetrack lanes,to yarn a tale.
                                 P. Chandrasekaran.
        {Note:-Wheeler dealers are those engaging in 
       political/commercial scheming}




Saturday, June 8, 2019

கணக்கு

விழித்தெழும் பொழுதுகள்,  
வழித்தடக் கனவுகளை 
வேட்டை யாடியதின்
தடயம் தெரிகிறது.

வீட்டையும் வீதியையும் 
கூட்டிப் பெருக்கியதில், 
ஏட்டிக்குப் போட்டியாய் 
கணக்குகள் எகிறுகிறது.

கனமான பொழுதுகளை 
கழித்துப் பார்க்கையில்,
ஆயுட்காலத்தின் அரைப்பகுதி
காணாமல் போகிறது. 

குழித்திட்ட விதைகள் 
புதைத்திட்ட  பிணமாகிட,
கழித்தலோ கூட்டலோ 
காலத்தின் கணக்கு?. 

முழுநிலவு மகிழ்ச்சி 
முகம்மாறித் தேய்ந்திட, 
அழுமிருளாய்ப் பெருகிடும் 
ஆழ்கிணற்றுச் சோகம்.

வரிசையாய்ப் பெருகிடும் 
ஆண்டின் கணக்கினில்,
சிரிப்பின் ஓசையை 
சரித்திடும் ஓலம் .


நெரிசலாய்க் கூடிடும் 
நிகழ்வுகளின் கணக்கில், 
அரியதோர் அடையாளம் 
அட்டையாய் நிற்குமோ?
  
தனக்கென முத்திரை
பதித்திடா வாழ்வில், 
பரிதாபம் கூடுமோ, 
பரவசம் கழியுமோ? 

கோழையின் நெஞ்சினில் 
உழன்றிடும் ஊனத்தின் 
நிழல்யுத்தக் கணக்குகள், 
நிஜமோ பொய்யோ? 

'பதிவு'கள் பெருக்கி 
பாதையை 'வகு'க்கையில், 
நால்வகைக் கணக்கும் 
நாழிகை கணக்கோ? 

போலிக் கணக்குகளே 
புலன்நிறை பாதையினை 
பூதமெனச் சூழ்ந்திடும், 
போதைக் கணக்குகளாம்! 

கூலிக் கணக்கை 
கொடுக்காது பெருக்கிட, 
மூலக் கணக்கு 
மூளையின் பலமாம்! 

மூலையில் ஒருநாள் 
முடங்கிப் படுத்திட, 
மூளையின் கணக்குகள் 
மூடிய கணக்காம்!. 
ப.சந்திரசேகரன் .   

Wednesday, June 5, 2019

Exemptions.


                             l
Every rule might have an exemption;
But every exemption need not bypass a rule.
People are visibly good because,
Their badness is exempted.
Life is obviously full of joy because,
Our eyes have dried up the tears.
The cycle of relationship sustains its speed,
Because it rides over all its ruckus.
Revenge and forgiveness exempt each other.
Friendship exempts all clauses,barring betrayal.
Marriage exempts women from gender mutuality.
Love exempts selective hatred as human foible.
Each exemption is a loophole in human foundation;
Each foundation is laid down with a tacit temptation.

                                  ll 
Religion exempts even deadly sins from punishment, 
Contending the ledger of God through confessions.
When God Himself is exempted from religious fury,
Temples,mosques,churches,synagogues  
And various other places of worship,
Seek exemption from their respective scriptures.
Profit comes with the exemption of loss.
Tax exemptions are a token of concession,
Made available on top of burning taxes.
Even Justice exempts crimes on benefit of doubt.
People exempt political frauds through the ballot.
Trade exempts consumers,from their eligible benefits.
It is all exemptions galore for the sake of convenience
To let each routine exempted,from its ethical lenience.
P. Chandrasekaran

Sunday, June 2, 2019

பெருக்குமோ,இளைக்குமோ?

பணம் பெருத்திட
நாணயம் இளைத்தது; 
சொகுசு பெருத்திட
உழைப்பு இளைத்தது; 
மதம் பெருத்திட
இறைநெறி இளைத்தது; 
சாதீயம் பெருத்திட, 
சமத்துவம் இளைத்தது; 
அதிகாரம் பெருத்திட
அன்பு இளைத்து; 
ஆசைகள் பெருத்திட, 
தேவைகள் இளைத்தது; 
ஆதிக்கம் பெருத்திட
நிர்வாகம் இளைத்தது;
வழக்குகள் பெருத்திட
தீர்ப்புகள் இளைத்தது;
சர்ச்சைகள் பெருத்திட, 
சரித்திரம் இளைத்தது;  
வாகனம் பெருத்திட
சாலைகள் இளைத்தது; 
சுயநலம் பெருத்திட
சேவைகள் இளைத்தது; 
பொருமல் பெருத்திட, 
பொறுமை இளைத்தது;  
இறுக்கம் பெருத்திட, 
இல்லறம் இளைத்தது; 
குற்றம் பெருத்திட, 
குணமெலாம் இளைத்து; 
சுற்றம் பெருத்திட,
சொந்தம் இளைத்து; 
சுதந்திரம் பெருத்திட, 
பொறுப்புகள் இளைத்தது; 
ம் பெருத்திட, 
தருமம் இளைத்தது; 
வன்மம் பெருத்திட, 
வாழ்வே இளைத்தது. 
பெருத்தது இளைத்திடின், 
இளைத்தது பெருக்குமோ? 
ப.சந்திரசேகரன் .  

Tuesday, May 28, 2019

The Worrier

I am a worrier and it seems,
I am born to worry.
I used to worry about my mistakes
When I have not made any.
I would quite often worry if I have hurt,
Not knowing that I have not hurt.
I would worry about people whom I love
If they are close to me,unaware of their 
Being close to me in mind and spirit.
I would worry about my environment
Despite the fact that it has so many others
To worry about and take care of.
I worry about my religion quite a lot
When God himself does not worry about it.
I worry about politics when it is all
Nothing but a tale of victory and defeat
In elections enamoured of the wallet 
And the extent to which its power wields.
I worry a lot about the ills of my country
When all goes well in times of crises of kinds.
All these worries waft fast into the waste bin
When my sanity soars high and is set to win.
P. Chandrasekaran. 

Friday, May 24, 2019

எடுப்புச்சாப்பாடு

எத்தனை நாளாச்சு
உன்னை நான்பார்த்து!
பளபளன்னு பாத்திரங்கள்
பலவிதமாய் பளிச்சிடவே,
குலுங்கிக் குலுங்கிகிட்டு  
கூடையிலே கூட்டமிட்டு 
ஏறிநீ இறங்கிடவே, 
உலையோடு அன்புருகி 
தலைக்கேறிய கவசமென, 
பலவீட்டுக் கைமணமாய்
இலையோடு  நீவருவாய்!
பலமான பசியுடனே
வயிரெல்லாம் வாடிநிற்க,
விலையில்லா நண்பருடன்
கலந்துண்ட நாட்களெல்லாம்,
மலைச்சாரல் மகிழ்வுகளே.

சமையலன்று சான்றுரைத்த 
சமத்துவங்கள் சரிந்திடவே,
சாதிமத பேதங்கள்
மோதிநிற்கும்  காலமிது!
எல்லோரும் ஓர்குலமே
எனும்வழி நடந்துவந்த 
எடுப்புச் சாப்பாடே,
என்றேனும் நீ ஒருநாள்
மீண்டும்வர மார்க்கமுண்டோ?
கையேந்தி பவனெல்லாம்
கால்முளைத்து பவனிவர, 
கைமாறிக் கைமாறி 
பையாப்பு கருதாத 
மெய்யான மனிதரின், 
சுமையோடு சுவையாகி 
பையப் பசிபோக்கி, 
'ஐயமிட்டு உண்'ணச்செய்த 
எடுப்புச் சாப்பாடே, 
கைம்மாறு உனக்குண்டோ? 
காலத்தில் இடமுண்டோ?
கச்சிதமாய் இருந்தாலும் 
அட்சய பாத்திரம்போல் 
அன்னமிட்டு நீபெருக, 
மிச்சம்வைக்கும்  சாப்பாட்டை 
எச்சிலென பாராது, 
உச்சநேயம் போற்றியதும், 
ஊரறிந்த உலகளவே!
ப.சந்திரசேகரன் .  

Sunday, May 19, 2019

Image

Is the 'I' in me,my image?
Which mirror reflects the image?
Which image does the mirror reflect?
Is it the beauty in me,or the ugliness?
The superior in me,or the inferior?
The love in me,or the hatred?
The anger in me,or the poise?
The silence in me,or the noise?

Do my friends or my foes see more of my'I'?
While foes probe into my image,friends save it.
My alter egos are perhaps a semblance of
What in me is reflected as the 'I' of me.
The 'I' in fact inches close to one's profile
And makes oneself,one's own anti hero.
Where the 'I' is warily won over everywhere,
The absence of 'I' creates an awesome image.

The 'I' surrounded by volcanoes,blows out.
Foxes of the brain feed the 'I' with jealousy junk.
Greedy wolves of the brain,lift the'I' to its peak.
Where the soul rejoices in taking showers,
Under the fountain of love,the 'I' is washed away
Along with all the dirt that has damaged the mirror.
The clean mirror reflects then, the true image,
Of the one living,as loving and lovable to the core .
P. Chandrasekaran.