Tuesday, May 14, 2019

திமிறல்கள்

கருவறையின் திமிறல்கள் தாய்மைக்குக் கொண்டாட்டம்;
குழந்தையின் திமிறல்கள் குடும்பத்தின்  கொண்டாட்டம்; 
இளமையின் திமிறல்கள் இணைபவர்க்குக் கொண்டாட்டம்; 
இல்லறத்தின் திமிறல்கள் அகமகிழும் கொண்டாட்டம்.
சுமையேற்கும் திமிறல்கள் சுகம்காணும் மரபாகி 
வாழும்நாள் ஒவ்வொன்றும் வகைவகையாய்த் திமிறிடுமாம்!
வயதோடு வம்பிழுத்துத்  திமிறலெல்லாம் திணறி 
தரைதொடும்  வானமென நிலம்சாய்ந்துத் திமிறிடுமாம் ! 
நிமிர்ந்துநின்ற நடுமுதுகை நிமிடங்கள் கேலிசெய்ய 
அமிழ்ந்திடும் வேளையிலும் அரைநாழிகைத் திமிறிடுமாம்!
பாதங்களின் புரட்சியெலாம் பாதிவழி தடம்புரள, 
மீதிவழித் திமிறல்கள் மறுதலையின் கொண்டாட்டம்.
தவணையிலே திமிறல்கள் தலைக்கேறி குடைசாய,
எமனோடும்  திமிறுகையில்,சிதையிழக்கும் கொண்டாட்டம். 
ப.சந்திரசேகரன் .  

Saturday, May 11, 2019

From the Mother's Mill {Happy Mothers' Day}

How we came here,our mother knows more;
Why we are here,is all a story for us in store.
If we know it not,it is not the flaw of her mill;
Nor is it the defeat of God's,or Nature's will.

The garnering gamut of the mother's womb,
Is not meant to guard us ever,up to the tomb.
Our space here,is just a pulmonary parking lot,
To fix the ills and not to fret about the ratty rot.

Cursing our mother for our self-made setbacks,
Is nothing but a shame to her sacrificing tracks.
A mother is the multiple of our suffering stocks.
Let us bask in her bastion,breaking all our blocks.

Wear not a mask and wish her happy mother's day;
Tear the frills and tuck her spirit into our life's sway. 
P. Chandrasekaran.

The Throwaways.

Throwing something away
Eases the load,as much as
It causes hurt,where it is thrown.
Each delivery throws away
The maternal throes of the labour ward.
Amidst the throes is also thrown aboard
A life that can cause or ease hurt.
The mother's womb manufactures
Both mainstream and macabre products.
Each delivery throws away a product
To absolve or pollute the earth.
The pollution of the placenta is in fact
More alarming than that of plastic.
Life's throwaways transform the holiest rivers
Into unholy litter corridors of monumental sins,
Draining the mother earth of her fertile interiors.

As the mind is becoming more and more
A minuscule of the body,
What matters more,is the matter
And not the manner of how the matter is.
Bundles of currency build life's stuff.
Buried currencies might outnumber
Undelivered posts of the dead letter office.
There is nothing sweet in the fleshy fleet
Except that it grows fatter as fabulous wealth.
Like the rights of life being sold at throwaway prices,
Virtues are thrown away in turn for a variety of vices.
The death throes are the ultimate throwaways
Of the load of pains caused to others,
As qualms and compunctions,unable to subside.
The final partition of the body and mind throws away
The inherited and invited throes of the labour ward.
P. Chandrasekaran.


துண்டு

       துண்டு
உழைக்கையில்,
வியற்கையில்
துடைக்கையில்,
இயற்கையாய் இணையும்
இரவல் தாய்.
பிழைக்கையில்
பெயர்க்கையில்
தினம் தினம் மாற்றி
செழிக்கையில்,
செயற்கையாய்ச் சேரும்
கறவை மாடு.
ப.சந்திரசேகரன் . 

Wednesday, May 8, 2019

தப்பே இல்ல!

காசு வாங்கி ஓட்டுப்போட்டா தப்பே இல்ல;
கூசுறதே தூசியின்னா தப்பே இல்ல.
பாத்து பாத்து ரெய்டுபோனா தப்பே இல்ல;
சேத்துவச்ச காசு ஏதும் தப்பே இல்ல.
மாறி மாறி அணியமைச்சா தப்பே இல்ல;
சேறுவாரி எறச்சதெல்லாம்  தப்பே இல்ல.
நிறுவனங்கள் நெலகொலஞ்சா தப்பே இல்ல; மறுமணங்கள் பெருகிப்போனா தப்பே இல்ல. 
சாதியெல்லாம் சறுக்குவதில் தப்பே இல்ல; 
நீதிகூட நொறுங்கினாலும் தப்பே இல்ல.
  
வாடிக்கையா கெட்டப் பேச்சு தப்பே இல்ல;
மேடையேறி மொழியக் கொன்னா தப்பே இல்ல.
வாக்குறுதி அள்ளிவிட்டா தப்பே இல்ல;
பாக்குறது பணம் மட்டும்னா தப்பே இல்ல.
ஆலமரம் அடிசரிஞ்சா தப்பே இல்ல;
காலம் மாறி போச்சு ஏதும் தப்பே இல்ல. 
செத்தவங்கள இழிவுசெஞ்சா தப்பே இல்ல; 
மொத்தமாகக் குணம்செத்தா தப்பே இல்ல. 
நல்லவழி காட்ட இங்கே  யாரும் இல்ல; 
எல்லாவழியும் பொல்லாவழி தப்பே இல்ல.  
ப.சந்திரசேகரன் .  

Monday, May 6, 2019

நெட்டுக்குத்தாய் நின்றேன்!

முல்லை பெரியாரென
முறுக்கேறிய என்மனம்,
முகலிவாக்கக் கட்டிடமாய் 
முகப்பிழந்துச் சரியுமோ? 
என்வாழ்க்கைப் பயணமென்றும் 
எழும்நெடுஞ் சாலையில்தான். 
என்பார்வை பலவீனத்தில், 
என்றுமில்லை பாசாங்கு! 
அக்கம்பக்கம் பார்க்காத,
அவசரப் பயணமென், 
கருவறையின் வனவாச,
கவனக் குறைபாடோ ?
உருவாகி வெளிவந்த 
ஒருகால உடற்குறையோ  ?
பற்றாத பாதத்தால், 
பெற்றோரின் பெருந்தவத்தால், 
படுகுழியில் பலநாட்கள் 
நெட்டுக்குத்தாய் நின்றது,
இனிதாய் இளைப்பாறும், 
தெனாலிக் கவிஞனின் 
தெருவிளக்குக் கதையே!
நடக்காதெனும் நிலைப்பாடு, 
நான்நடந்ததும் நடந்தது.
வடக்கும் தெற்குமாய், 
கிழக்கும் மேற்குமாய்,
நடந்து நடந்தே 
குழியில் நின்ற கால்கள்,
குன்றிலும் நின்றன.
நெடுஞ்சாலைப் பயணத்தில்
நிழற்குடை சலனங்கள், 
நெருடல்களின் தோரணமே .
அக்கம்பக்கம் பார்த்திருந்தால்
அங்கும்நான் நின்றிருப்பேன்!
குறுக்குச் சந்துகளில் 
குடியேறாக் கால்கள்,
குறைகள் காண்பதில்லை.
நெட்டுக்குத்தாய் நின்றதும்
நெடுங்குழியின் நற்பலனே,
முல்லை பெரியாராய் 
நிலம்சார்ந்து நிற்பதற்கு. 
மெல்லக்குடை சாய்ந் 
மவுலிவாக்கம் போலன்று! 
ப.சந்திரசேகரன் .  

Saturday, May 4, 2019

The Grand Grip

'Hold my hand'said God.
'How long and how far?'I asked.
'As long as you need mine'said He.
I have walked through all these years
With faith firmer in His,than in
My own limbs that wobble often.
Quite a few times did I happen to fall,
Stumbling upon unwanted humps
Or letting myself off His hold,
While boarding moving vehicles
With least caution,thinking bold.
He would never let my days stall
Though I fell wantonly,fancying tall.
Once I thought I slipped into my life's ditch;
But He pulled me out,by the turn of a switch.
Ageing is not waiting for losing His grip;
It is our frail will that sinks the sailing ship.
How many hands He has to hold 
And how many falls He has to withhold.
So long the soul is sure to stick to His form,
Does He help us,braving many a storm.
Until the body is laid to rest on His final call,
The might of faith,fails many a fall.
P. Chandrasekaran.