Tuesday, November 18, 2025

திக்கெட்டும் தில்லை.

கிணற்றுத் தவளைக்கு கிணறே பிரதானம்;

கிழக்கும் மேற்கும் பழக்கம் இல்லை.

பிணத்திற் காவது பிரிவின் சமாதானம்;  

விழும் மாலைகள் வாழ்வோர் எல்லை.

கணக்குகள் பார்க்கையில் தேவை நிதானம்; 

பிழைகள் ஏற்படின் பிறந்திடும் தொல்லை.

மணக்கும் மாலைகள் மலர்களின் தானம்; 

மழித்தலும் நீட்டலும் இளித்திடும் பல்லை. 

பிணக்கிற்கு மருந்து பிடித்ததோர் மௌனம்; 

பழிக்கத் தொடங்கிடின் வீசுவர் கல்லை. 

இணக்கம் தாழ்ந்திடின் எதிர்ப்படும் ஈனம்;

இழிவை மறுத்திடும் மனமொரு முல்லை

துணிச்சலாய் வாழ்ந்திட தூவிடும் வானம்

தொழிலைத் தொழுதிட திக்கெட்டும் தில்லை.

ப.சந்திரசேகரன்.


 

1 comment:

  1. "......விழும் மாலைகள் வாழ்வோர் எல்லை.....???"

    ReplyDelete